சனி, 19 ஜூன், 2010

ஞாயிறு, 13 ஜூன், 2010

ஊர் கூடி தேர் இழுத்தால்...

தி. இன்பராஜ்

 "இலக்கு' என்ற சொல்லைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இல்லை. மனித வாழ்க்கையில் இலக்கு இல்லையேல் எதிலும் நம்மால் வெற்றி பெற முடியாது என்பது மட்டும் உண்மை.
இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் (இந்தியாவின் உதவியோடு?) சிங்கள ராணுவத்தினரின் இலக்கு, விடுதலைப்புலிகளை அடியோடு அழிப்பதில் மட்டுமல்லாமல் தமிழர்களையும், அவர்களது வம்சத்தையும் முற்றிலுமாக அழிப்பதில்தான்.
ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு போர் உக்கிரத்தை எட்டியுள்ள நிலையில், நமது தொப்புள்கொடி உறவுகள் காக்கப்பட வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களின் இலக்கு எது?.
ஷஇலங்கையில் தேவை உடனடிப் போர் நிறுத்தம்'
30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றும வரும் இந்தப் போருக்கு முடிவு சில நாள்களில் ஏற்பட்டுவிடுமா? என்பது சில அரசியல் தலைவர்களின் கேள்வி.
ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தொடரும் போராட்டங்களின் நிலை எப்படி இருக்கிறது தெரியுமா?.
பரபரப்பான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவதை நேரடியாகப் பார்க்கும் நாம்,  இந்தியா எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று ஆவலோடு காத்திருப்போமே! அதுபோல் இல்லாமல், என்றோ ஒரு நாள் பாகிஸ்தானிடம் நாம் தோற்ற போட்டியின் மறு ஒளிபரப்பை பார்த்தபடி எப்படியும் இந்தியா வெற்ற பெற வேண்டும் என நினைத்து, இருக்கிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஆர்வமுடன் பார்ப்பதைப்பூபோல் இருக்கிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும், இன்னும் பிற அமைப்பைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்திக் கூறுவது ஷஇலங்கையில் உடனடியாக வேண்டும் போர் நிறுத்தம்' என்ற ஒற்றை வரி வாசகம்தான்.
கேட்டவுடன் மனதுக்கு இதம் தரும் இந்த வாசகத்தை நோக்கித்தானே நமது பயணம் இருக்க வேண்டும்?. ஆனால்  தற்போதைய போராட்டங்களின் கோரிக்கை ஒன்றாக இருந்தாலும், குறிக்கோள் எட்டக்கூடியதாக இருக்கிறதா என்பதை போராட்டக்காரர்கள் ஒரு வினாடி நினைத்துப் பார்க்க வேண்டும்.
மக்களவை உறுப்பினர்கள் ராஜிநாமா (?), உண்ணாவிரதம், மனித சங்கிலி, ஆர்ப்பாட்டங்கள், தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் என பலகட்டமாக தங்களது எதிர்ப்பைத் தமிழகத்தில் பதிவு செய்த போதிலும், நம் போராட்டத்தின் இலக்கு எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்றால், அந்த இடத்தில் ஒரு புள்ளியைக்கூட நம்மால் வைக்க முடியாது; வெற்றிடம்தான்.
ஏனென்றால், சிங்கள அரசை உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யும்படி நாம் (தமிழர்கள்) வலியுறுத்துகிறோம். ஆனால், சிங்கள அரசின் அதிபர் நம்நாட்டிற்கு வந்து, நம் பிரதமரை சந்தித்து, நிதானமாகப் பேசிவிட்டு (ஏன் மனமகிழ்ச்சியோடு உணவும் அருந்தியிருக்கலாம்) தனக்கே உரித்தான பகட்டுச் சிரிப்போடு ஷஇலங்கையில் போர் நிறுத்தம் என்பதற்கு தற்போது வாய்ப்பே இல்லை' என அறிவிக்கிறார்.
இலங்கையில் இதே வார்த்தையை அவர் கூறும்போது சிங்களவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்வதோடு, தேர்தலில் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்கையும் பதிவு செய்வார்கள். ஆனால், அவர் கூறியது கோடிக்கணக்கான தமிழர்கள் வாழும் இந்தியாவில்.
ராஜபக்ஷ கூறியது அவரது ரத்தத்தில் கலந்த விஷயமாக இருந்தாலும் அவர் கூறிய நேரம், தமிழகத்தில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது என்பதால், அவரது கூற்றை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஷபோரை நிறுத்த மாட்டோம்' ஷதமிழர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை' என்று இந்தியாவில் வந்து கூறும் அளவுக்கு இலங்கை அதிபருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உறுதுணையாக இருப்பது யார்?
இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கப்பட்டதா? எனப்  பல்வேறு தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் லாவகமாக பதில் கூறியபடி தப்பிச் செல்லும் தந்திரத்தை மத்திய ஆட்சியாளர்களுக்கு கற்றுக் கொடுத்தது யார்?.
நடைபெற்ற போராட்டங்களை விட்டுவிட்டு இனிவரும் போராட்டங்களைப் பற்றி நாம் சிந்தித்தாலும் அதற்கான விடையைத் தேடினாலும் அதற்கான பதிலும், போராட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான்.
முதல்வர் கருணாநிதி தலைமையில் டிசம்பர் 4 ஆம் தேதி பிரதமரைச் சந்திப்பது என்பது நல்ல முடிவாக இருந்தாலும், ராஜபக்ஷ இந்தியாவுக்கு வந்து செல்வதற்கு முன் இந்த முடிவை எடுத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியிருந்தால் நமது கோரிக்கைக்கு முடிவு கிடைப்பது பற்றி ஓரளவு தகவல் தெùரிந்திருக்கும். இது தாமதமாக எடுத்த முடிவாகவே கருதப்படுகிறது.
புதிய கூட்டணியைத் தேடுவதற்கும், கூட்டணியில் இருந்து சிலரைக் கழற்றி விடுவதற்கும் இலங்கைத் தமிழர் பிரச்னையை கையில் எடுக்காமல், தமிழ் இனத்தின் பரிதாபநிலை தவிர்க்கப்பட வேண்டும் என்ற ஒரே கோணத்தில் இப்பிரச்னையை அரசியல் கட்சியினர் கையாள வேண்டிய கட்டாய தருணம் இதுவே.
ஷஊர்கூடி தேர் இழுத்தால்' என்ற வாசகத்தை மனதில் கொண்டு அனைத்துத் தரப்பினரும், ஒன்றுகூடி களத்தில் இறங்கினால் மத்திய அரசு செவி சாய்க்காமலா இருந்துவிடும்.
இதுவரை நடத்திய போராட்டங்களால் இலக்கை நம்மால் எட்டமுடியாவிட்டாலும், இலக்கை அடையும் அளவுக்கான போராட்டத்தை அனைவரும் ஒன்றுகூடி நடத்தினால் வெற்றி என்ற இலக்கு தேடி வரும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், அதற்குள் இலங்கையில் ஒரு தமிழனாவது உயிரோடு இருக்க வேண்டுமே?.

(இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தினமணியில் பிரசுரமானது)

குரலை மாற்றி பேசும் வசதி கொண்ட செல்பேசிகளால் ஆபத்து...

தி. இன்பராஜ்

  தொழில்நுட்ப வளர்ச்சி வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன.
  தகவல் தொடர்புக்கான கண்டுபிடிப்புகளில் பெரிய சாதனையாகக் கருதப்படும் தொலைபேசியின் வழித்தோன்றலான செல்பேசி இன்று அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நம்மில் கணிசமானோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசிகள் உண்டு.
  கையடக்க செல்பேசிகளை விதவிதமான வடிவங்களில், நவீன வசதிகளுடன் அறிமுகம் செய்வதில் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் விளைவாக டார்ச் லைட்டில் தொடங்கி கேமரா, விடியோ, என்று ஒவ்வொரு நாளும் புதுப்புது வசதிகள் செல்பேசிகளில் கூடிக்கொண்டே போகின்றன.
இந்நிலையில், சீன நாட்டு தயாரிப்பு செல்பேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஷவாய்ஸ் சேஞ்சர்' என்ற வசதி பலரின் தூக்கத்தைக் கெடுப்பதாக மாறியிருக்கிறது. சில முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் இந்த வசதி தற்போது வரத் தொடங்கிவிட்டது.
அதாவது, இந்த வசதியுள்ள செல்பேசிகளில், ஷவாய்ஸ் சேஞ்சர்' பகுதியில் முதியவர், நடுத்தர வயது ஆண், இளைஞர், குழந்தை, இளம்பெண், நடுத்தர வயது பெண், மூதாட்டி என்று 7 வகையான குரல் பிரிவுகள் இருக்கும்.
இதில், ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொண்டு நாம் பேச விரும்பும் நபரைத் தொடர்பு கொண்டால், எதிர் முனையில் இருப்பவருக்கு நம்முடைய குரல் நம் குரலாக ஒலிக்காது; மாறாக, நாம் தேர்ந்தெடுத்த முதியவர் குரலோ பெண் குரலோ ஒலிக்கும் மிகவும் தத்ரூபமாக.
பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காக இந்தத் தொழில்நுட்ப வசதியை செல்பேசி நிறுவனங்கள் வழங்கினாலும், சிலர் தவறான வழியில் இந்த வசதியைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.
உதாரணமாக, நாம் இளம்பெண் குரலைத் தேர்ந்தெடுத்து பேசினால், எதிர்முனையில் இருப்பவர் தன்னிடம் பேசுவது இளம்பெண் என்றுதான் நினைத்துக் கொள்வார்.
இந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவு எத்தனை மோசமானதாக இருக்கும் என்பதற்கு  அண்மையில் மதுரையில் நிகழ்ந்த பொறியாளர் முத்துவிஜயன் கொலை சம்பவம் ஒரு உதாரணம்.
மதுரை மாவட்டம், அனுப்பானடியைச் சேர்ந்தவர் முத்துவிஜயனிடம் (24) செல்பேசியில் பேசிய ஒருவர் தனது பெயர் பிரியா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளார். முத்துவிஜயனும் அவரை நம்ப, நாளடைவில் இருவரும் அடிக்கடி பேசத் தொடங்கியிருக்கின்றனர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் மனம்விட்டு பேசியுள்ளனர். பிரியா தனக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி முத்துவிஜயனிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார்.
ஒரு நாள் முத்துவிஜயனுக்கு உண்மை தெரியவந்தது; ப்ரியா என்ற பெயரில் ஷவாய்ஸ் சேஞ்சர்' வசதியைப் பயன்படுத்தி தன்னிடம் பேசியது ஓர் ஆண் என்று. இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்தது. முத்துவிஜயன் கொல்லப்பட்டார். பெரும் சிரமத்துக்குப் பிறகு எதிரிகளை போலீஸôர் கைது செய்தனர்.
முத்துவிஜயன் ஓர் உதாரணம்தான். வெளியே தெரியாமல் எத்தனையோ ஷவாய்ஸ் சேஞ்சர்' மோசடிகள் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவமானத்துக்கு பயந்து இந்த மோசடிகள் அவரவருக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.
பொதுவாக, தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை பலர் தமக்குள்கூட சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலால், இத்தகைய பிரச்னைகள் சமயத்தில் ஒருவரின் மன நலனையே பாதிக்கக்கூடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
ஆனால், உளவியல் அடிப்படையிலும் குற்றச் செயல்கள் அடிப்படையிலும் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கும் இத்தகைய தொழில்நுட்ப வசதியைக் கட்டுப்படுத்த நம்முடைய சட்டத்தில் இடமில்லை என்பதே வருத்தத்துக்குரிய விஷயம்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ஷசெல்பேசியில் குரலை மாற்றிப் பேசி மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றி புகார்கள் வந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மற்றபடி தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லை' என்கின்றனர்.
பிரச்னைக்குரிய இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேபோல, தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கும், இதுபோன்ற வசதிகளைக் கொண்ட செல்பேசிகள் வைத்திருப்பவர்களுக்கும் சுயக்கட்டுப்பாடு அவசியம்.

(2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி தினமணி பத்திரிகையில் பிரசுரமானது)

காக்க.. காக்க...

தி. இன்பராஜ்

   மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலின் போது உயிரிழந்த அதிரடிப்படைப் பிரிவின் (ஏடிஎஸ்) தலைவராக இருந்த விஜய் கர்கரேயின் மனைவி கவிதா கர்கரே அண்மையில் கூறிய ஓரு கருத்து ஆழமான சிந்தனையைத் தூண்டியுள்ளது.
"எனது கணவர் ஹெல்மெட் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள்  துளைக்காத ஆடையை அணிவது போன்ற காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் எனது மனதில் ஒரு விஷயம்தான் நிழலாடுகிறது. இவையெல்லாம் உயிர் காக்கும் திறன் கொண்டவையா? மேலும், பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு நவீன ஆயுதங்கள் போலீஸôரிடம் உள்ளனவா? என்றும் தோன்றும்' என்றார் கவிதா கர்கரே.
மும்பை தாக்குதல் சம்பவம் பற்றி கருத்து வெளியிட்டிருந்த சில வெளிநாட்டுப் பத்திரிகைகளோ ஷதீவிரவாதிகளை எதிர்கொள்ளும் போது போலீஸôர் பயன்படுத்திய ஆயுதங்கள் மிகவும் பழைமையானவை' என்றும், ஷதற்காப்பு அணிகலன்களோ அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டியவை' என்றும் கேலி செய்திருந்தன.
ஒருவகையில் அதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
மறைமுகத் தாக்குதலில் இருந்து மாறி நேரடித் தாக்குதலுக்கு இறங்கியுள்ள தீவிரவாதிகளின் ஒரே பலம் அவர்கள் கையில் வைத்திருந்த நவீன ஆயுதங்களே!.
இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் ஆங்காங்கே போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நவீன ஆயுதங்கள் பற்றிய தகவல் மக்களிடையே அச்சத்தை எழுப்பும் விதத்திலேயே உள்ளது.
தூத்துக்குடியில் கள்ளத் துப்பாக்கிகளை விற்க முயன்றதாக 4 பேரை போலீஸôர் கடந்த மாதம் 28}ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 எம்.எம். ரகத்தைச் சேர்ந்த 5 நவீன துப்பாக்கிகள், 33 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, மேலும் 3 துப்பாக்கிகளையும், 70 தோட்டாக்களையும் போலீஸôர் பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நவீன ரக கைத்துப்பாக்கிகளை பரிசோதித்த போலீஸôர் ஒரு நிமிஷம் ஆடிப்போய்விட்டார்களாம். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த துப்பாக்கிகள் அவை.
பிடிபட்டவை சில என்றாலும், இதுவரை யாரெல்லாம் துப்பாக்கிகளைக் கடத்தல் கும்பலிடமிருந்து பெற்றனர்? எத்தனை ரெüடிகளிடம் இதுபோன்ற துப்பாக்கிகள் உள்ளன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதேபோல, ஊட்டியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் இறந்ததையெடுத்து, அவரது வீட்டிலிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கித் தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர் ஆகிய நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இத்தனை நவீன ஆயுதங்கள் அவரது வீட்டுக்கு எப்படி வந்தன என விசாரிக்க முடியாமல் போலீஸôர் குழப்பத்தில் இருப்பது தனிக் கதை.
நாளுக்கு நாள் இதுபோன்ற நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுவது சாதாரணணமான விஷயமாகிவிட்டது. இதிலிருந்து ஷபோலீஸôரைவிட சமூக விரோதிகளே வலிமையாக உள்ளார்கள்' என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் நவீன யுகத்துக்கு ஏற்ப நாளுக்கு நாள் புதிது புதிதாகச் சிந்தித்து தங்களது திட்டத்தைச் செயல்படுத்தி வரும் நிலையில், காவல் துறையோ  இன்னும் ஹைதர் அலி காலத்து பழைமையிலிருந்தே மாற மறுக்கிறது.
எதிர்பாராத தாக்குதல்களில் தீவிரவாதிகள் ஈடுபடும் போது, அதிக உயிர்களை நாம் இழப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்களும் ஓர் காரணமே!.
இது ஒருபுறமிருக்க உள்ளூர் ரெüடிகளைப் பிடிக்க முயலும் போது நவீன ரக துப்பாக்கியைக் கொண்டு அவர்கள் மிரட்டினால், நம்மிடம் உள்ள 303 ரக துப்பாக்கியைக்  கொண்டு என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை போலீஸôர் எழுப்பும் நிலை உள்ளது.
இதுபற்றி காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:  ஷநம்மிடம் நவீன ஆயுதங்கள் எல்லாம் அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவற்றைப் பயன்படுத்தும் முறை பற்றி நன்கு அறிந்தவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர்.
காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவுடன் கடுமையான பயிற்சியில் ஈடுபடும்போது இருக்கும் ஆர்வம் காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் போலீஸôரிடம் குறைந்து வருவது வருத்தத்துக்குரியது.
நவீன ஆயுதங்கள் பற்றி தெரிந்து கொள்வதிலும், எந்த வகை ஆயுதமாக இருந்தாலும் நம்மால் பயன்படுத்த முடியும் என்ற ஆர்வமும் காவலர்களிடம் அதிகரித்தால்தான் சவால்களை எளிதில் எதிர்கொண்டு காவல் துறைக்கு கெட்டபெயர் வராமல் தடுக்கலாம்' என்றார் அவர்.
காவல் துறையை நவீனப்படுத்தும்போது கட்டமைப்பு வசதிகளை மட்டுமே மாற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் அவ்வப்போது அறிமுகமாகும் நவீன ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட தற்காப்பு ஆயுதங்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள், ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை பற்றியும் போலீஸôர் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

(2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி திங்கள்கிழமை தினமணியில் பிரசுரமானது)

தோள் கொடுக்கும் தோரியம்...

தி. இன்பராஜ்

  இன்றைய தினம் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் முக்கிய பிரச்னையாக இருப்பது மின் வெட்டுதான்.
தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைத் தீட்டாததால் போதிய உற்பத்தி இல்லாமல் மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகப் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.
  நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள் மூலம் 66 சதமும், நீர் மின் நிலையங்கள் மூலம் 17 சதமும், அணு மின் நிலையங்கள் மூலம் 15 சதமும், காற்றாலைகள் உள்ளிட்ட மற்ற ஆதாரங்கள் மூலம் 2 சதமும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் 25 சதத்தை மட்டுமே நிறைவு செய்கிறது.
உலகில் பெட்ரோல், நிலக்கரி ஆகியவற்றின் வளம் குறைந்து வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் மாற்று எரிபொருள் உற்பத்தி செய்யும் கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம்.
குப்பையிலிருந்தும், சூரிய ஒளியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் என்று நாம் கூறினாலும், தற்போதைய தேவைக்கு அவை போதுமானதாகாது.
மின் உற்பத்திக்கு நாம் பல வழிகளைத் தேடி வரும் நிலையில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கிடைக்கும் தோரியம் மூலம் தேவைக்கும் அதிகமான மின் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உலக நாடுகளில் மொத்தமுள்ள தோரியம் 25 லட்சத்து 73 ஆயிரம் டன். இதில், 3 லட்சத்து 19 ஆயிரம் டன் மட்டும் இந்தியாவில் கிடைக்கிறது. உலகளவில் 12 சதத் தோரியம் நம்நாட்டில் உள்ளது.
ராமேசுவரம் உள்ளிட்ட கடல் பகுதியில் கடலுக்கு அடியில் 36 ஆயிரம் டன் தோரியம் இருப்பதாகக் கூறுகின்றன தொல்லியல் ஆய்வுகள். தமிழகக் கடலோரப் பகுதிகளான தூத்துக்குடி, ராமேசுவரம், மிடாலம், காணிமடம், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தோரியம் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அணுசக்கி ஆய்வில் யுரேனியம்} 233, யுரேனியம்} 235, புளூட்டோனியம்} 239 என்ற மூன்று நிலைகள் உள்ளன. இதுதவிர, இந்திய அணுசக்தித் திட்டத்துக்கு அடித்தளமாக இருப்பது தோரியம் என்கிறார் திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் இரா.ஆ. ஜெய்குமார்.
தோரியம் பற்றியும் அதன் பயன்பாடுகள் குறித்தும் அவர் மேலும் கூறியது:
ஷஅணு உலையில் தோரியத்தை பயன்படுத்தும் போது அவை நியூட்ரானை உள்வாங்கி யுரேனியம்} 233 ஆக மாறும். அப்போது கிடைக்கும் மின்சார அளவானது யுரேனியத்தைத் தனியாகப் பயன்படுத்தும்போது கிடைப்பதைவிட 7 மடங்கு கூடுதலாக நமக்குக் கிடைக்கும்.
தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் மற்றும் அணுசக்தி தயாரிக்கும் திறமை உலகில் இந்திய விஞ்ஞானிகளால் மட்டுமே சாதிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.
நம்நாட்டில் தற்போது உள்ள 22 அணு உலைகளில் 70,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அணு உலைகளை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் லட்சகணக்கானோருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தோரியத்தைப் பயன்படுத்தும் அணுசக்தி திட்டத்துக்கான ஆரம்ப முதலீடு அதிகமாக தெரிந்தாலும், நமக்கு நீண்ட கால நன்மை கிடைக்கும். பொருளாதாரம் வளரும் அளவுக்கு குறைந்த செலவில் நம்மால் மின் உற்பத்தி செய்ய முடியும்.
கடலுக்கு அடியில் 36 ஆயிரம் டன் தோரியம் எப்படி வந்தது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
பெருங்கடல்களில் உள்ள கடல் குன்றுகளில் பிளவுகள் வழியாக ஊடுருவும் குளிர்ந்த கடல் நீரின் வெப்பநிலை கடல் எரிமலை குளம்புகளால் அதிகரித்து இரும்பு, மாங்கனீஸ், தாமிரம், நிக்கல், பெர்ரஸ் போன்ற உலோகங்கள், உப்புகளை கரைத்து பிரிக்கிறது.
இந்தக் கடல் நீர் 380 டிகிரி செல்சியஸ் வெப்ப நீர் ஊற்றாக வெளியில் வருகிறது. கரைந்த உலோக உப்புகள் சில சமயங்களில் உலோக சல்பைடு தாதுக்களாகப் படிகின்றன. இந்தத் தாதுக்களில் தங்கம் ஏராளமாகக் காணப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்குச் சொந்தமான பொருளாதாரக் கடல் மண்டலத்தில் 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் ஒரு கோடி டன் தாமிரம், கோபால்ட், நிக்கல் மற்றும் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வங்காள விரிகுடா கடல் பகுதியில் அண்மையில் 36 ஆயிரம் டன் தோரியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை கனிம உலோகங்களிலிருந்து பிரித்தெடுக்க பல கோடி ரூபாய் செலவாகும்.
இந்தத் தோரியம் மூலம் நம் தேவைக்கு ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தும் வகையில் மின்சாரம் தயாரிக்கலாம்' என்றார் பேராசிரியர் ஜெய்குமார்.
தோரியம் என்ற மூலப்பொருள் நம்நாட்டில் அதிகளவு உள்ள நிலையில், கூடுதல் அணு மின் உலைகள் அமைத்து மின் உற்பத்தியை அதிகரிப்பது அரசின் தற்போதைய முக்கிய பங்காகும்.
நம் நாட்டில் கிடைக்கும் தோரியம் நமக்காகத் தோள்கொடுக்க காத்துக் கொண்டிருந்தாலும் அதை முறையாகப் பயன்படுத்துவது நம் விஞ்ஞானிகளின் கையில்தான் உள்ளது.

(2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி திங்கள்கிழமை தினமணியில் பிரசுரமானது)

புதன், 9 ஜூன், 2010

"மலைக்கோட்டை' விரைவு ரயிலை திருச்சியிலிருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் மறுப்பு?


First Published : 09 Jun 2010 10:10:57 AM IST


திருச்சி, ஜூன் 8:  கும்பகோணம்- சென்னை இடையே திருச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் "மலைக்கோட்டை' விரைவு ரயிலை மீண்டும் திருச்சியிலிருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விழுப்புரம்} மயிலாடுதுறை அகலப் பாதையில் ரயில் போக்குவரத்துத் தொடங்கியதும், தற்போது கும்பகோணம்- சென்னை இடையே திருச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் "மலைக்கோட்டை' விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படும் என்பது ரயில்வே நிர்வாகத்தின் நீண்ட... (?) கால அறிவிப்பு.ஆனால், விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப் பாதையில் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கிவிட்டது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்களில் 90 சத ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.இதுதவிர, திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் இடையே திருச்சி, விருத்தாசலம் வழியாக தற்போது இயக்கப்பட்டு வரும் "செந்தூர்' வாராந்திர விரைவு ரயிலும் (வண்டி எண். 6736/6735) வரும் ஜூலை 29-ம் தேதி முதல் மயிலாடுதுறை - விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.   மேலும், ராமேசுவரத்தில் இருந்து திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலும் (வண்டி எண். 6701/6702) ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சென்னை செல்வதற்கு போதுமான ரயில்கள் இயக்கப்படத் தொடங்கிவிட்டன.இருப்பினும், விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் "மலைக்கோட்டை' விரைவு ரயிலை திருச்சியிலிருந்து இயக்குவது குறித்த எந்த அறிவிப்பையும் ரயில்வே நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை. "மலைக்கோட்டை' விரைவு ரயிலில் மொத்தமுள்ள 22 பெட்டிகளில், திருச்சி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 11 பெட்டிகளில் தினமும் கூட்டம் நிரம்பியே காணப்படுவதால் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். கோடை விடுமுறையில் திருச்சி மக்கள் பட்ட அவதிக்கு குறைவே கிடையாது எனலாம்.ரயில்வே முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, இ. வேலு, தற்போதைய இணை அமைச்சர் இ. அகமது, தெற்கு ரயில்வே முன்னாள் பொது மேலாளர் ஜயந்த், தற்போதைய பொது மேலாளர் தீபக் கிரிஷன் உள்ளிட்ட ரயில்வே துறையைச் சேர்ந்தவர்கள் திருச்சி வரும்போதெல்லாம் விரைவில் மலைக்கோட்டை ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படும் என்பதை மறுக்காமல் கூறி வந்தனர்.  இதற்கிடையே, வருகிற ஆகஸ்ட் முதல் தேதி அல்லது 15-ம் தேதி முதல் திருச்சியிலிருந்து மலைக்கோட்டை விரைவு ரயில் இயக்கப்படலாம் என்ற தகவல்கள் சில நாள்களுக்கு முன்பு வெளியாகின.  ஆனால், இந்தத் தகவலை ரயில்வே நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே முதுநிலை வணிகப் பிரிவு மேலாளர் ஏ.பி. முத்துராமலிங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: "ஆகஸ்ட் 15-ம் தேதி மலைக்கோட்டை விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதில் உண்மையில்லை. இதுவரை இதற்கான கருத்துருவோ, உத்தரவோ தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் இருந்து திருச்சி கோட்ட அலுவலகத்துக்கு வரவில்லை' என தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு திருச்சி பகுதி மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மலைக்கோட்டை விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படுவதற்கு தாமதம் ஏன்? எப்போது இங்கிருந்து இயக்கப்படும்? என்ற கேள்வி ரயில்வே நிர்வாகத்தை நோக்கி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டியது அவர்களின் கடமையே!  கடந்த சில ஆண்டுகளாக திருச்சியில் இருந்து மலைக்கோட்டை விரைவு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் கண்துடைப்புதானோ? என்ற நிலை திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.  மலைக்கோட்டை விரைவு ரயிலை திருச்சியில் இருந்து விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது என நுகர்வோர் அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், சேவை அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.  போராட்டத்தை தடுப்பதும், திருச்சி பகுதி பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் மலைக்கோட்டை ரயிலை திருச்சியிலிருந்து இயக்குவதும் ரயில்வே நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. செவிசாய்க்குமா ரயில்வே நிர்வாகம்?.