புதன், 26 மே, 2010

இலக்கு இல்லாத வாகனத் தணிக்கை...

தி..​ இன்பராஜ்
First Published : 26 May 2010 03:25:57 AM IST

Last Updated : 26 May 2010 05:59:15 AM IST

திருச்சி ​​ :​ ​ ​ ​ ​திருட்டு வாகனங்களைக் கண்டுபிடிப்பது,​​ குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவோரைக் கட்டுப்படுத்துவது,​​ பழைய குற்றவாளிகளை அடையாளம் காண்பது,​​ வெளியாள்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது போன்றவையே வாகனத் தணிக்கையின் நோக்கம்.

ஆனால்,​​ தமிழகம் முழுவதும் தற்போது நடத்தப்படும் வாகனத் தணிக்கைகளில் இந்த விதிமுறைகள் ஏதும் கடைப்பிடிக்கப்படாமல் அபராதம் விதிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டு போலீஸôர் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தொடக்க காலங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும்போது ஓட்டுநர் உரிமம்,​​ ஆர்.சி.​ புத்தகம்,​​ வாகனக் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்க்கும் போலீஸôர் உரிய ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிப்பர்.

ஆனால்,​​ நாளடைவில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸôர் தங்களுக்குத் தேவையான "மாமூலை' பெறத் தொடங்கினர்.​ இதனால்,​​ போக்குவரத்து பிரிவுக்குச் செல்ல காவலர்களிடையே கடும் போட்டி நிலவியது.

குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் போதும் அல்லது கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வாகன ஓட்டிகள் நிர்பந்திக்கப்படுவதால் விதிமுறைகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.​ ​

இதில்,​​ இன்னொரு பிரச்னையும் உள்ளது.​ சமூக விரோதிகள்,​​ குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் வாகனங்களில் பயணிக்கும் போது ஆயுதங்களை எடுத்துச் சென்றாலும்,​​ அவ்வளவு எளிதாக போலீஸôரிடம் சிக்காததற்கு இந்த "மாமுல்' சோதனையும் ஒரு காரணமே!

எந்த நோக்கத்துக்காக வாகனத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டதோ,​​ அதற்கு எதிர்மாறாக சில காவலர்களின் நடவடிக்கையால் நோக்கம் நிறைவேறாமல் போனது.

தற்போதும், ​​ இரு சக்கர வாகனங்கள் மீது காட்டும் தீவிரத்தை போலீஸôர் கார்,​​ வேன்,​​ தனியார் பேருந்து ஆகியவற்றில் காட்டுவதில்லை.​ ஏனென்றால்,​​ காரில் வருவோரிடம் அபராதம் வசூலித்தால் தங்களது வேலைக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயமும் உள்ளூர போலீஸôரிடம் இருக்கத்தான் செய்கிறது.

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியைப் பொருத்தவரை வாகனத் தணிக்கை என்பது அன்றாடமாகிவிட்டது.​ நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.​ ஒரு லட்சம் வரை அபராதத் தொகை வசூலிப்பதை போலீஸôர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

2008}ம் ஆண்டில் வாகனத் தணிக்கையின்போது வசூலிக்கப்பட்ட தொகை ரூ.​ ஒரு கோடியே 13 லட்சம்.​ ஆனால்,​​ 2009}ம் ஆண்டில் மட்டும் 2 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் ஜனவரி மாதம் ரூ.​ 36 லட்சத்து 62 ஆயிரமும்,​​ பிப்ரவரி மாதம் ரூ.​ 30 லட்சமும்,​​ மார்ச்,​​ ஏப்ரல் மாதங்களில் சராசரியாக ரூ.​ 25 லட்சம் வரை வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.​ ​

வாகனத் தணிக்கையில் போக்குவரத்து பிரிவு போலீஸôரை தவிர,​​ சட்டம்,​​ ஒழுங்குப் பிரிவு,​​ குற்றப் பிரிவு போலீஸôரும் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களது பணி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரைப் பிடிப்பதற்கு சிரமப்பட்டு,​​ இலக்கை எளிதில் எட்டுவதற்காக அரசு மதுக் கடை "பார்' முன் நின்று கொண்டு கடையில் இருந்து வெளியே வரும் நபர்களை மறித்து,​​ அவர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்கின்றனர்.

எந்த நோக்கத்துக்காக வாகனத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டதோ அந்த இலக்கில் இருந்து விலகிச் செல்லாமல் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டால் போலீஸôருக்கும்,​​ அரசுக்கும் அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக