சனி, 22 மே, 2010

தனி​யார் கட்​டுப்​பாட்​டில்அரசு மது​பா​னக் கடை​கள்?


First Published : 06 May 2010 09:46:29 AM இசட்





திருச்சி, ​​ மே 5:​ அரசு மது​பா​னக் கடை​யாக இருந்​தா​லும்,​​ பார்​களை நடத்​தும் தனி​ந​பர்​க​ளின் கட்​டுப்​பாட்​டுக்​குள்​தான் டாஸ்​மாக் மதுக் கடை​கள் இயங்​கு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன.​ ​​ ​ ​ ​ தமி​ழ​கத்​தில் மது விற்​பனை மூலம் தனி​ந​பர்​கள் அதிக லாபம் பார்த்து வந்த நிலை​யில்,​​ கடந்த 2003-ம் ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் அர​சு​டை​மை​யாக்​கப்​பட்​டது.​ தமி​ழ​கம் முழு​வ​தும் ஒப்​பந்த அடிப்​ப​டை​யில் ஏறத்​தாழ 32,000 பணி​யா​ளர்​கள் நிய​மிக்​கப்​பட்​ட​னர்.​​ ​ ​ கண்​கா​ணிப்​பா​ளர் ரூ.​ 50,000-ம்,​​ விற்​ப​னை​யா​ளர் ரூ.​ 15,000-ம் முன்​வைப்​புத் தொகை​யாக அர​சி​டம் செலுத்​தி​னர்.​ தற்​போது கண்​கா​ணிப்​பா​ளர் ரூ.​ 4,000,​ விற்​ப​னை​யா​ளர் ரூ.​ 2,800-மும் ஊதி​ய​மா​கப் பெற்று வரு​கின்​ற​னர்.​​ ​ தமி​ழ​கம் முழு​வ​தும் தற்​போது 6,500 டாஸ்​மாக் மது​பா​னக் கடை​கள் உள்​ளன.​ இவற்​றில் ஏறத்​தாழ 31,500 ஊழி​யர்​கள் பணி​யாற்​று​கின்​ற​னர்.​ டாஸ்​மாக் கடை​க​ளின் மூலம் அர​சுக்கு கடந்த 2008-09 நிதி​யாண்​டில் கிடைத்த வரு​வாய் ரூ.​ 12,800 கோடி.​​ ​ வரு​வாய் அதி​கம் கிடைத்​தா​லும்,​​ டாஸ்​மாக் ஊழி​யர்​க​ளுக்கு வார,​​ தேசிய விடு​மு​றை​கள் வழங்​கப்​ப​டு​வ​தில்லை.​ அந்த நாள்​க​ளில் கூடு​தல் ஊதி​ய​மும் வழங்​கப்​ப​டு​வ​தில்லை.​ ​​ ​ மேலும்,​​ தமிழ்​நாடு தொழில்​சா​லை​கள் சட்​டப்​படி தங்​க​ளுக்கு சலு​கை​கள் வழங்க வேண்​டும் என்​ப​தும் அவர்​க​ளின் கோரிக்​கை​க​ளில் ஒன்று.​ அர​சி​யல் சாசன விதி 309-ன் படி பணி விதி​க​ளை​யும்,​​ பத​வி​க​ளை​யும் முறை​யாக உரு​வாக்க வேண்​டும் என்​றும் அர​சுக்கு ஊழி​யர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ள​னர்.​​ ​ ​ தற்​போது,​​ டாஸ்​மாக் எந்​த​வித வரன்​மு​றை​யும் இல்​லா​மல் மாவட்ட மேலா​ளர் என்ற பத​வி​யில் உள்​ள​வர்​க​ளின் கட்​டுப்​பாட்​டில் உள்​ள​தா​க​வும்,​​ ஆனால்,​​ அவர்​கள் சில தனி​ந​பர்​க​ளின் குறிப்​பாக,​​ ஆளும் கட்​சி​யி​ன​ரின் கட்​டுக்​குள் இருப்​ப​தா​க​வும் ஊழி​யர்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ள​னர்.​​ ​ ​ மாவட்ட மேலா​ளர்​க​ளா​கப் பணி​யாற்​று​ப​வர்​க​ளில் சிலர் தங்​க​ளுக்கு கீழே ஒருங்​கி​ணைப்​பா​ளர் என்ற பத​வியை உரு​வாக்கி,​​ அதிக விற்​ப​னை​யா​கும் கடை​களை கண்​கா​ணிக்​கச் செய்​வ​தா​க​வும்,​​ பின்​னர் அந்​தக் கடை​யின் கண்​கா​ணிப்​பா​ளர்,​​ ஊழி​யர்​க​ளி​டம் குறிப்​பிட்ட தொகையை தனக்கு ஒதுக்க வேண்​டும் என்று மிரட்​டு​வ​தா​க​வும் புகார் எழுந்​துள்​ளது.​​ ​ ​ தாங்​கள் எதிர்​கொள்​ளும் பிரச்​னை​க​ளுக்​காக கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி கடை​ய​டைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​க​ளில் மாநி​லம் முழு​வ​தும் 102 பேர் இடை நீக்​கம் செய்​யப்​பட்​ட​னர்.​ இதே​போல,​​ மாநி​லம் முழு​வ​தும் ஏறத்​தாழ 1100 பேர் இடை நீக்​கத்​தில் இருப்​ப​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​​ ​ ​ ​ கார​ண​மின்றி இட​மாற்​றம்,​​ இடை நீக்​கம் செய்​யப்​பட்​ட​வர்​களை அழைத்​துப் பேசும் தனி​ந​பர்​கள்,​​ குறிப்​பிட்ட தொகை​யைப் பெற்​றுக் கொண்டு தங்​க​ளது செல்​வாக்கு மூலம் அதி​கா​ரி​க​ளி​டம் பேசி மீண்​டும் அவர்​க​ளுக்கு பணி வழங்​கு​கின்​ற​னர்.​​ ​ ​ இட​மாற்​றம்,​​ இடை நீக்​கம் என்ற வார்த்​தை​யைப் பயன்​ப​டுத்தி எந்​த​வித விதி​மு​றை​யை​யும் கடைப்​பி​டிக்​கா​மல் தங்​க​ளுக்​குள்ள அதி​கா​ரத்தை கையில் எடுக்​கும் இந்த அதி​கா​ரி​கள் "வெறுங்​கை​யில் முழம் அளப்​பது போல" ஊழி​யர்​க​ளி​ட​மி​ருந்து ஒரு தொகை​யைக் கறந்து விடு​கின்​ற​னர்.​​ ​ ​ காஞ்​சி​பு​ரத்​தில் டாஸ்​மாக் ஊழி​ய​ரி​ட​மி​ருந்து ரூ.​ 5,000 லஞ்​சம் பெற்ற மாவட்ட மேலா​ளர் அண்​மை​யில் கைது செய்​யப்​பட்​ட​தும் இந்​த​வகை மிரட்​டல் வழி​யில்​தான்.​ மேலும்,​​ சில கடை​க​ளில் திருட்டு நடக்​கும்​போது அதற்கு ஊழி​யர்​களே பலி​கடா ஆக்​கப்​ப​டு​வ​தா​க​வும் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.​​ ​ ​ இது​த​விர,​​ முக்​கி​ய​மான பிரச்​னை​யாக இருப்​பது தனி​யா​ருக்கு பார் நடத்த அனு​மதி வழங்​கி​ய​து​தான்.​ உள்​ளூர் முக்​கிய-​ ஆளும் கட்​சிப் பிர​மு​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் இந்த பார்​க​ளால் டாஸ்​மாக் பணி​யா​ளர்​க​ளுக்கு பல்​வேறு நடை​முறை பிரச்​னை​கள் ஏற்​பட்​டுள்​ளன.​ ​​ ​ ​ அரசு மது​பா​னக் கடை என்​ற​போ​தி​லும்,​​ பார் நடத்​து​வோ​ரின் கட்​டுப்​பாட்​டில்​தான் இருப்​ப​தா​க​வும்,​​ இதை எதிர்க்​கும் ஊழி​யர்​கள் எந்​த​வி​தக் கார​ண​மு​மின்றி அதி​கா​ரி​க​ளால் இட​மாற்​றம் செய்​யப்​ப​டு​வ​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​​ ​ ஏனென்​றால்,​​ உள்​ளூர் பிர​மு​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் பார்​க​ளில் இருந்து குறிப்​பிட்ட தொகை சம்​பந்​தப்​பட்ட அதி​கா​ரி​க​ளுக்கு எவ்​வித தடங்​க​லும் இல்​லா​மல் சென்​று​வி​டு​வ​தா​க​வும்,​​ அவர்​கள் ஊழி​யர்​க​ளின் குறை​களை நிவர்த்தி செய்​வ​தில் கவ​னம் செலுத்​தா​மல் பார் நடத்​து​வோ​ரின் கட்​டுக்​குள் இருப்​ப​தா​க​வும் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.​ ​​ ​ ​ இது​த​விர,​​ மது​பாட்​டில்​கள் கொண்டு வரப்​ப​டும் அட்​டைப்​பெட்​டி​க​ளைக் கையாள்​வது,​​ சரக்​கு​களை கவ​ன​மாக இறக்​கு​வது,​​ விற்​பனை மூலம் கிடைக்​கும் பணத்தை வங்​கி​யில் செலுத்​து​வ​தி​லுள்ள சிக்​கல்​கள் ​(சென்னை தவிர)​,​​ ஊக்​கத் தொகை வழங்​கா​தது,​​ கார​ண​மின்றி இட​மாற்​றம்,​​ அதி​கா​ரி​க​ளால் எடுக்​கப்​ப​டும் தேவை​யற்ற ஒழுங்கு நட​வ​டிக்கை என பல்​வேறு பிரச்​னை​க​ளால் தங்​க​ளுக்கு மன உளைச்​சல் ஏற்​ப​டு​வ​தாக ஊழி​யர்​கள் புலம்​பு​கின்​ற​னர்.​​ ​ ​ ​ பல்​வேறு பிரச்​னை​க​ளுக்கு இடையே ஊழி​யர்​கள் பணி​யாற்றி வரும் நிலை​யில்,​​ டாஸ்​மாக் கடை​க​ளின் மூலம் வரு​வாய் ஈட்​டு​வதை மட்​டுமே குறிக்​கோ​ளா​கக் கொண்டு அரசு செயல்​ப​டக் கூடாது என்​றும்,​​ ஊழி​யர்​க​ளின் நலன்​க​ளை​யும் அரசு கவ​னத்​தில் கொள்ள வேண்​டும் என்​றும் அண்​மை​யில் தனி நீதி​பதி கே.​ சந்​துரு தீர்ப்​ப​ளித்​தார்.​ இதன்​படி,​​ அரசு உட​ன​டி​யாக டாஸ்​மாக் நிர்​வா​கத்தை வரன்​மு​றைப்​ப​டுத்த வேண்​டும் என்​கின்​ற​னர் ஊழி​யர்​கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக